logo

தமிழ்நாடு - தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஆட்டோ ஓட்டுனர் மல்லிகார்ஜுனனின் வித்தியாசமான சமூகசேவை !!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், ஆட்டோ ஓட்டுனர் மல்லிகார்ஜுனன் என்பவர் தனது ஆட்டோவின் மேற்கூரையில் பல்வேறு வகையான செடிகளை வைத்து சிறு பூங்கா போல அமைத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.தன் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கோடை வெயில் வெப்பத் தாக்கம் இல்லாமல் பயணிக்கவும், ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள் தாகத்தை தீர்க்கும் வகையிலும், தனது ஆட்டோவின் அருகில் வந்து செல்லும் பொதுமக்களும் தனது ஆட்டோவில் குடிநீரை அருந்த குடி நீர் குழாய் வசதியும் செய்து வைத்துள்ளார்.இவரைப் போல பல்வேறு மல்லிகார்ஜுனன் கள் இந்த கோடை வெயில் வெப்பத் தாக்கம் இல்லாமல் இருக்க முன் வருவார்கள் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்...... ஆட்டோ மல்லிகார்ஜுனன் அவர்கள் சமூக சேவைப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!..............................................................ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF - மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் - அ.ந.வீரசிகாமணி

22
556 views