இந்தியர்கள் தாய்நாட்டிற்கு அதிக பணம் அனுப்புவோர் முதலிடம்
உலகம்: ஐ.நா.,வின் புலம்பெயர்ந்தோர் முகமை வெளியிட்ட 'உலக இடப்பெயர்வு அறிக்கை 2026' படி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்காக அனுப்பும் பணத்தில் உலகிலேயே முதலிடம் பிடித்துள்ளனர். 2024ம் ஆண்டின் தரவுகளின் படி, இந்தியர்கள் 12.87 லட்சம் கோடி ரூபாய் பணத்தை தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர், இது 2010 முதல் 2024 வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பெறும் பணம் 2010ல் 5.03 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2024ல் 12.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐ.நா.,வின் புலம்பெயர்ந்தோர் முகமை, இந்திய புலம்பெயர்ந்தோர் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பொருளாதார நிலைத்தன்மைக்கும் முதுகெலும்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2024ம் ஆண்டில் இந்தியா மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு முந்தியது.
மேலும், சர்வதேச அளவில் கல்வி கற்க செல்லும் மாணவர்களில் சீனா முதலிடம் மற்றும் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.