இந்தியா கூட்டணியின் கடையநல்லூர் தொகுதியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு...
17/04/2026 அன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் தி.மு. ராஜேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு ,
தமிழ்நாடு காங்கிரஸ் கலைப் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இலக்கியத் தென்றல் வழக்கறிஞர் Dr. R.S.K.துரை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை மாநில செயலாளர் நல்லூர் நாயகன் கே.எஸ். கணேசனுடன் திரிகூடபுரம் , சொக்கம்பட்டி, சிங்கிலி பட்டி, சங்குநப்பேரி, இடைகால், ஊர்மேல் அழகியான், சுந்தரேஸ்புரம் மற்றும் சற்றியுள்ள கிரமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கே. சிவராம கிருஷ்ணன், மற்றும் மதிமுக அவைத்தலைவர் சக்தி வடிவேல்,மதிமுக மாவட்ட பெரும் தலைவர் சிவசுப்பிரமணியன் ,மாவட்ட காங்கிரஸ் அமைப்புச் செயலாளர் திருமலையப்பன், கடையநல்லூர் காங்கிரஸ் இலக்கிய அணி வட்டாரத் தலைவர் காசி தர்மம் ,எம். திருமலை குமார் ,சங்கை நகர காங்கிரஸ் கலை இலக்கியப் பிரிவு தலைவர் P .ரிபாய், காங்கிரஸ் பேச்சாளர் அச்சம்பட்டி செல்லையா பாண்டி,விசிக கடையநல்லூர் சட்டமன்ற நகர செயலாளர் E. பாக்கியநாதன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுடன் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்கள்.