தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்த்து சட்ட மசோதா நகல் எரிப்பு...
16/04/2026 இன்றைய தினம் தென்காசி மாவட்டம் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி சட்ட மசோதா நகல் எரிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை சிறப்புரை யாற்றினார்,தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் உள்பட திமுக மாநில செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை , விசிக மண்டல செயலாளர் எம். கே.இசக்கி பாண்டியன், மாநில காங்கிரஸ் எஸ் சி துறை செயலாளர் நல்லூர் நாயகன் கே.எஸ். கணேசன், மாவட்ட விசிக செயலாளர் எட்டப்பன் தென்காசி தொகுதியின் சட்டமன்றம் , மாவட்டச்செயலாளர் பண்பொழி செல்வம் கடையநல்லூர் சட்டமன்றத்தொகுதி,விசிக கடையநல்லூர் சட்டமன்ற நகரச் செயலாளர் E. பாக்கியநாதன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.