logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டுமா வளைகுடா நாடுகள்?

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது.

இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வளைகுடாவின் உட்பகுதி வரை சென்றடைகின்றன. அவை அமெரிக்கத் தளங்களைத் தாண்டிப் பல வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எரிசக்தி தளங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுமக்களின் இடங்களைக் குறிவைக்கின்றன.

இரானிய தாக்குதல்களை அரபு மற்றும் மேற்கத்திய தலைவர்கள் பரவலாகக் கண்டித்துள்ளனர். அதேநேரத்தில், பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் அதிகரித்து வரும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியுறவு அமைச்சர்களும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர்.

அடுத்தகட்டத் தாக்குதல்கள் 'கூட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை' தூண்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பிராந்தியத்தை ஒரு விரிவான போருக்குள் தள்ளுவதைத் தடுக்க பதற்றத்தைக் குறைக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

பஹ்ரைனைச் சேர்ந்த டெராசாட் மையம், வளைகுடா நாடுகள் இரான் நாட்டுக்கு எதிராக எந்தவொரு விரோத நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் இரானிய தாக்குதல்களில் குடிமக்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதால் அவை மோதலில் சிக்கியுள்ளன என்றும் வலியுறுத்தியது.

இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது விதியின் கீழ் கடுமையான சர்வதேசப் பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

பிராந்திய நெருக்கடி அதிகரித்து வருவதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

2
58 views

Comment