logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

அமெரிக்க எரிபொருள் கட்டமைப்பு முழுமையாக அழிக்கப்படும்! ஈரான் சூளுரை

அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிபொருள் உள்கட்டமைப்புகளும் அழித்து சாம்பலாக்கப்படும் என்று ஈரான் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், அந்த தீவு முற்றிலும் அழிக்கப்பட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை கார்க் தீவில் இருந்துதான் கையாண்டு வருகிறார்கள். இந்த தீவின் மீது அமெரிக்காவின் தாக்குதல் ஈரானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் ராணுவப் படைப் பிரிவான ட்டாம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”ஈரானிய உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்புகளையும் தாக்கி சாம்பலாக்குவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டிரம்ப் வெளியிட்ட பதிவில், “மத்திய கிழக்கின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார்க் தீவில் உள்ள ஒவ்வொரு ராணுவ இலக்குகளையும் குறிவைத்து அழித்துள்ளோம். முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன” எனத் தெரிவித்திருந்தார்.

ஈரான் தரப்பில் இருந்து கார்க் தீவில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்ற விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், கார்க் தீவில் உள்ள விமானத் தளம், ஜோஷென் கடல் தளம், விமான நிலையக் கட்டுப்பாட்டு கோபுரம், ஹெலிகாப்டர் ஹேங்கர் உள்ளிட்டவை அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

0
0 views

Comment