logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

ஈரான் வெளியுறவு அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்!

ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வியாழக்கிழமை (மார்ச் 5) செல்போன் மூலம் உரையாடியுள்ளார். ஆனால், இருநாடுகளின் அமைச்சர்களிடையே நடைபெற்ற உரையாடல்கள் குறித்த எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனிக்கு, மத்திய அரசு இன்று இரங்கல் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள இரங்கல் புத்தகத்தில் மத்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்திய அரசின் சார்பில் கையெழுத்திட்டார்.

கடந்த பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போர் குறித்து, கண்டனம் மற்றும் இரங்கல் தெரிவிக்காததற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

2
89 views

Comment