logo

தென்காசி மாவட்டம்,புளியறையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...

இன்றைய தினம் தென்காசி மாவட்டம் ,புளியறையில் *"தேசத்தந்தை" மகாத்மா காந்தி* அவர்களின் பெயரில் செயல்படும் *தேசிய ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் திட்டத்தின்* பெயரை மாற்றியும், அதனை ஒழிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், சட்டத்தை கொண்டு வந்த மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அதிமுகவை கண்டித்து செங்கோட்டை அருகே உள்ள *புளியறையில் வைத்து இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக., பாஜகவை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் திமுக மாநில விவசாய அணி நிர்வாகி *திரு.அப்துல் காதர்,* தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாநில பொதுச் செயலாளர் *திரு.செங்கை கண்ணன்,* தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் *திரு.மூக்கையா,* செங்கோட்டை ஒன்றிய திமுக துணைச் செயலாளர் *திரு.வாசுதேவன்,* திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் *திரு.ரஹீம்,* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கோட்டை தாலுகா குழு செயலாளர் *திரு.வேலுமயில், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் நல்லூர் நாயகன் #கே .எஸ். கணேசன்,* தென்காசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் *திரு.ராஜீவ் காந்தி,* புளியறை ஊராட்சி மன்ற தலைவர் *திரு.அழகிய திருச்சிற்றம்பலம்,*

செங்கோட்டை காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் *திரு.முருகையா,* புளியறை கிராம காங்கிரஸ் தலைவர் *திரு.சங்கரலிங்கம்,* தெற்குமேடு கிராம காங்கிரஸ் தலைவர் *திரு.சங்கரலிங்கம்,* கிராம காங்கிரஸ் நிர்வாகிகள் *திரு.நடராஜன், திரு.பொன்னையா, திரு.ஷெரீப், திரு.ஐயப்பன்* மற்றும் *திமுக, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்* உள்ளிட்ட *"இந்தியா கூட்டணி" கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள்* உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக புளியறையில் உள்ள *"தேசத்தந்தை" மகாத்மா காந்தி* அவர்களின் சிலைக்கு *காங்கிரஸ் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை* செலுத்தினர்.

8
600 views