logo

CPIM அறிக்கை; 5 ஆண்டுகளில் 10,950 தொழில் நிறுவனங்கள் குஜாத்தில் மூடல்...

குஜராத் பாஜக அரசின் மோசமான தொழிற் கொள்கையில் உள்ள தெளிவற்ற நிலைகள் & குறைபாடுகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 10,950 சிறு, குறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூடப்பட்டுள்ளன. இதனை சட்டமன்றத்தில் மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

சட்டமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் பல்வந்த் சிங் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில், “கடந்த 5 ஆண்டுகளில் (2018 முதல் 2023 வரை) குஜராத்தில் மொத்தமாக 10,950 சிறு, குறு & நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

2018-2019 இல் 2,752 நிறுவனங்களும், 2019-2020இல் 2,873 நிறுவனங்களும், 2020-2021இல் 2,367 நிறுவனங்களும், 2021-2022இல் 1,749 நிறுவனங்களும், 2022-2023இல் 1,209 நிறுவனங்கள் என மொத்தம் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

பாஜகவின் தொழிற் கொள்கையின் விளைவு 5 ஆண்டுகளில் 10,950 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது சாதாரண விஷயம் அல்ல. தொழில் நிறுவனங்கள் மூடலுக்கு முக்கியக் காரணங்களாக, கடன் சுமை அதிகரிப்பு & அதைத் திருப்பிச் செலுத்த முடியாதது. தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டதால் குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பெருமளவு மூல தனமும் முடங்கியுள்ளது.

குஜராத் பாஜக அரசாங்கம் நன்கொடைக்காக கார்ப்பரேட் தொழில்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம், சிறு & குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வில்லை. இதனால் தான் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை பின்னடைவுக்குக் காரணம் என சிபிஐஎம் (CPIM) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0
0 views