
சமூக தாகம் இன்றைய செய்திகள் 25/11/2025...
25/11/2015 செவ்வாய்க்கிழமை (கார்த்திகை 9)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ கோவையில் செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🗞️ வெளி மாநிலத்தை சேர்ந்த 869 பேர் தமிழகத்தில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.
🗞️ அந்தமான் அருகே நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்- வானிலை ஆய்வு மையம்
🗞️ தாமிரபரணி ஆற்றில் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை
🗞️ ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
🗞️ தமிழ்நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
🗞️ தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கட்சியாக மாற்றுவதாக ஓபிஎஸ் அறிவிப்பு
🗞️ S.I.R படிவங்களை பூர்த்தி செய்ய கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை-தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திட்டவட்டம்
🗞️ டெல்லியில் காற்று மாசு காரணமாக அரசு, தனியார் நிறுவனங்களில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற அறிவுறுத்தல்
🗞️ மகளிர் உலகக்கோப்பை கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை