
சமூக தாகம் இன்றைய செய்திகள் 23/10/2025.
23/10/2025 வியாழக்கிழமை (ஐப்பசி 6)
*இன்றைய தலைப்புச் செய்திகள்!*
🗞️ பருவமழைக்கு தயார் நிலையில் 900 தீயணைப்பு வீரர்கள்
🗞️ சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
🗞️ 2025 ஆண்டுக்கான வைக்கம் விருது தேன்மொழி சௌந்தர்ராஜனுக்கு அறிவிப்பு
🗞️ கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
🗞️ தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
🗞️ கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
🗞️ தொடர் மழையால் தமிழ்நாடு முழுவதும் 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின
🗞️ தென் பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
🗞️ தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-வது ரயில் பாதை ரு.757 கோடி செலவில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்
🗞️ வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் மேற்கொள்வது குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை
🗞️ வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்குவதற்கு லஞ்சம். கர்நாடகாவில் பாஜக அரங்கேற்றிய மோசடி அம்பலம்
🗞️ ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதித்தது அமெரிக்கா
🗞️ இன்று 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரிட்சை