
பாஜகவின் தேர்தல் குறுக்கு வழிகளை முறியடிக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் - அ.ராசா பேச்சு
பாஜவின் குறுக்கு வழிகளை திமுக பாக ஒருங்கிணைப்பாளர்கள் முறியடிக்க வேண்டும்-ஆ.ராசா பேச்சு
கும்மிடிப்பூண்டி, அக்.5. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் ஞாயிறன்று நடைபெற்ற திமுக பாக ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசா, பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் போலி வாக்காளர்களை கொண்டும், தேர்தல் கமிஷனின் துணையோடும் பாஜக குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளதால், பாஜகவின் சதிகளை திமுக பாக ஒருங்கிணைப்பாளர்கள் முறியடிக்க வேண்டும் என்று பேசினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி - பொன்னேரி சட்டமன்ற தொகுதிகளின் திமுக பாக ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது,
இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவர் மு. பகலவன், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்றனர்.
இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன். தொகுதி பொறுப்பாளர்கள் கவி கணேசன், சுரேஷ், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சி.எச்.சேகர்,மாவட்ட பொருளாளர் எஸ். ரமேஷ், மாவட்ட துணை செயலாளர்கள் கே.வி.ஜி. உமாமகேஷ்வரி, எம்.எல். ரவி, கதிரவன், செயற்குழு உறுப்பினர் ஜெ.முர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகரன், வெங்கடாசலபதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பரிமளம் முன்னிலை வகித்தனர்
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொது செயலாளருமான ஆர் ராசா கலந்து கொண்டு பேசும் போது, பாக ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடி பாக முகவர்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிகளில் திறம்பட பணி செய்து திமுக அமோக வெற்றி பெற செய்ய பாடுபட வேண்டும் எனறார்.
தொடர்ந்து பேசியர் மத்திய பாஜக அரசு பல்வேறு மாநிலங்களில் போலி வாக்காளர்களை வைத்து தேர்தல் கமிஷனின் துணையோடு தேர்தலில் வெற்றி பெற்று வருகிறது அதுபோன்ற வாக்குத்திருட்டுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்பதால், பாக முகவர்கள் அவரவர் பாகத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரையும் தெரிந்து வைத்துள்ளனரா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தின் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் எம். எல். ரவி நன்றி கூறினார். கூட்டத்தில் திமுக அயலக அணி தலைவர் ஜி.மனோகரன்,மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாஸ்கரன், கும்மிடிப்பூண்டி நகர திமுக செயலாளர் அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.