logo

பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - தலைமைச் செயலாளர்

பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது - தலைமைச் செயலாளர்

சென்னை : பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கித் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது . இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு தழுவிய அளவில் நாளை பொது வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ள அவர்கள், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் . தமிழகத்தில் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் நாளைய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறி பங்கேற்றால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையுடன், "நோ வொர்க் நோ பே" என்ற அடிப்படையில் நாளை சம்பளம் வழங்கப்படாது என்றும் தெரிவித்திருக்கிறார் .பொது வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும் கூட, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் வழக்கம்போல் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பேருந்துகள் இயங்கும்:

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு புதன்கிழமை (ஜூலை 9) தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் வழக்கம்போல இயங்கும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள இந்த வேலைநிறுத்த அழைப்புக்கு, தமிழகத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சாா்ந்த தொழிற்சங்கத்தினா் ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் பிற கட்சிகளின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், அரசுப் பேருந்து சேவை முடங்க வாய்ப்பு இருப்பதாக தொழிற்சங்கங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகளை வழக்கம்போல இயக்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் முக்கிய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும், ஆளும்கட்சி
மற்றும் எதிா்கட்சி தொழிற்சங்கங்களை சோ்ந்த தொழிலாளா்கள் பெரும்பாலானோா் பணிக்கு வந்துவிடுவா். இதனால், பேருந்துகளை இயக்குவதில் எந்த சுணக்கமும் ஏற்படாது. வழக்கம்போல அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும். ஓட்டுநா், நடத்துநா்கள் வருகை குறைவாக இருந்தாலும், தேவையான அளவில் ஒப்பந்த பணியாளா்களும் கைவசம் இருப்பதால், பேருந்துகளை இயக்குவதில் எவ்விதப் பிரச்னையும் எழாது. ஆகவே, பொதுமக்கள் வழக்கம்போல தங்கள் பணிகளை தொடரலாம் எனத் தெரிவித்துள்ளனா்.

3
111 views