logo

ஊத்துக்கோட்டை போரூர் திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பொதுக்கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூர் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். பேரூர் இளைஞரணி அமைப்பாளர் ரஹீம், துணை அமைப்பாளர்கள் ஜீவா,அருண் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சங்கர், வெங்கடேசன், சம்சுதீன், சீனிவாசன், கோல்ட் மணி, கோகுல் கிருஷ்ணன், நரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் பாரி ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே சிறப்புரை ஆற்றி பேசினர்.கூட்டத்தில் சி.எச். சேகர், ஜான் என்கிற பொன்னுசாமி, சத்தியவேல் சமிமா ரஹீம், இந்துமதி கோகுல், சராயுதீன், வெங்கடேசன், டில்லி பாபு, ஜெய்கணேஷ், வேணுகோபால், பழனிச்சாமி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்

17
1376 views