logo

திருச்சியில் மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் பங்கேற்பு

மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாளையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்.. தமிழ் நாட்டில் இந்து விரோத அரசு செயல்பட்டு வருகிறது. திருச்சியில் நடைப்பெற்ற விசிக பேரணியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும், 37௦ சட்டப்பிரிவு குறித்தும் பேசப்பட்டது. இது நாட்டிற்கு எதிரானது. நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்து விரோதம், தேச விரோதம் இரண்டும் ஒன்றுதான். தமிழக அரசு இந்து விரோத, தேசவிரோத போக்கை கைவிட வேண்டும். நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறுவதை வரவேற்கிறேன். ஆனால் இத்தனை ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்தவர்கள் அதை ஏன் செய்யவில்லை. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பின்பு உயர்கல்வியில் தமிழ் கொண்டு வரப்படும். இன்று அரசியலுக்காக தமிழ் ஸ்டெண்ட்டை முதலமைச்சர் அரங்கேற்றுகிறார். 1967 ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருந்தது. இன்று மருத்துவர்கள், பொறியாளர்கள் என உயர் பதவியிலிருக்கும் யாருக்கும் தமிழ் எழுத தெரியவில்லை. அதற்கு காரணம் திமுக தான். குடும்பக்கட்டுப்பாடு என முதன் முதலில் கூறியவர் ராமகோபாலன். அதையே கூறுகிறார் இதுதான் பின்புத்தி. தமிழகம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேராததால் தான் நிதி ஒதுக்கப்படவில்லை. மற்ற நிதிகள் வழங்கப்பட்டது. கள் இறக்குவது குறித்து சீமான் வைக்கும் கோரிக்கை சரிதான். பா.ஜா.க. வும் நீண்ட காலமாக செய்து வருகிறது இவ்வாறு பேட்டியின் போது கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜசேகர், பார்த்திபன், அஞ்சாநெஞ்சன், மண்டல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.

-திருச்சி பிரசன்னா

42
2351 views