திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாரதியஜனதா கட்சியினர் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தேசியக் கொடி பேரணி’
காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலையும் இந்திய முப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக திருச்சியில் நேற்று (30-05-25) திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கையில் தேசிய கொடிகளை ஏந்தி பேரணி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். காந்தி மார்கெட் வளைவில் தொடங்கிய இந்த பேரணி மலைகோட்டை மலைவாசலில் முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சியினரும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.