logo

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பாரதியஜனதா கட்சியினர் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர் வெற்றி தேசியக் கொடி பேரணி’

காஷ்மீரின் பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து நடத்திய அதிரடி தாக்குதலில் அங்கிருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலையும் இந்திய முப்படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.
இந்த வெற்றியினை கொண்டாடும் விதமாக திருச்சியில் நேற்று (30-05-25) திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் கையில் தேசிய கொடிகளை ஏந்தி பேரணி ஊர்வலம் ஒன்றை நடத்தினர். காந்தி மார்கெட் வளைவில் தொடங்கிய இந்த பேரணி மலைகோட்டை மலைவாசலில் முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் பெருமளவில் பாரதிய ஜனதா கட்சியினரும் பொது மக்களும் கலந்துக் கொண்டனர்.

53
1601 views