தலைமைச் செயலாளர் கையில் திமுக அரசு — மதநீதியை சிதைக்கும் ஆட்சி!
அனகாபுத்தூரில் பள்ளிவாசல் இடிப்பு முயற்சி: முஸ்லிம்கள் கண்டனம்
அனகாபுத்தூர் காயிதே மில்லத் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிவாசல் மற்றும் அடக்கஸ்தலத்திற்கு அரசு வழங்கிய இடத்தை தற்போது ஆக்கிரமிப்பு என்று சொல்லி அகற்ற முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் இந்த பகுதியில் பள்ளிவாசலைச் சேர்த்து இடிக்க தலைமைச் செயலாளர் கடுமையாக அழுத்தம் தருகிறார் என்று செய்திகள் வெளியாகின்றன.
முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிஜியை சந்தித்த பின்னர், இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பதே தற்போதைய நிலவரம். அதிலும் தலைமைச் செயலாளர் முழுமையாக RSS-வின் வேலைகளை செய்வது போலவே நடந்துகொள்கிறார். இது மத உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் அநியாயமாகும். இஸ்லாமியர்களுக்கு உரிய நீதியை அரசு வழங்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை.