logo

நேற்றைய தினம் CPIM ன் கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ஒன்றிய அரசின் , விவசாய தொழிலாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

நேற்றைய தினம் CPIM ன் கட்சியின் சார்பாக தென்காசி மாவட்டம்,ஆலங்குளத்தில்,ஒன்றிய அரசின் விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து தொழிலாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் , விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் குணசீலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலுச்சாமி, பீடித் தொழிலாளர்கள் சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் மகாவிஷ்ணு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் தங்கம் , விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் ராமசாமி,விவசாய சங்க தாலுகா பொறுப்பாளர் வெற்றிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கனகராஜ், பொற்செழியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பாலு நன்றி கூறினார்.
கட்டுமான சங்க மாவட்டத் துனைத் தலைவர் மாரியப்பன், ஸ்டாலின் BSNL சொர்ணம், பீடி சங்க தாலுகா தலைவர் பரமசிவன், மாவட்டக்குழு உறுப்பினர் வள்ளிமயில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சின்னத்தாய், விவசாயத் தொழிலாளர்கள் சங்க தாலுகா குழு உறுப்பினர்கள் பத்திரகாளி ,வள்ளியம்மாள் நெட்டூர் லீலா ,அந்தோணிமுத்து ,கீழப்பாவூர் BSNL முருகேசன், ஞானதுரை ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அதிகாரி அவர்களிடம் , 74 விவசாயத் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கேட்டு மனு கொடுக்கப்பட்டது .

35
1117 views