
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் ரத்ததான முகாம்
கும்மிடிப்பூண்டி,மே.12. திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாளை ஒட்டி கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் ஞாயிறன்று ரத்ததான முகாம் நடைபெற்றது.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் தலைமையில் அததிமுக தகவல் தொழில்நுட்ப அணி, அண்ணா தொழிற்சங்கம், அதிமுக மருத்துவ அணி இணைந்து நடத்திய இந்த ரத்த தான முகாமை திருவள்ளூர் வடக்கு அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன், அதிமுக காஞ்சி மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சதீஷ் சங்கர், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் துவக்கி வைத்தனர்.
முகாமில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி.மகேந்திரன், அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் எல்.சுகுமாறன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் பிரசாத், தகவல் தொழில்நுட்ப மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.ராஜா, செந்தில், சரவணபூபதி. நந்தகுமார், நகர அதிமுக செயலாளர் எஸ்.டி.டி.ரவி முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து வேல்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி ரத்த வங்கி குழுவினர் இந்த முகாமில் பங்கேற்று ரத்த தானத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த ரத்த தான முகாமில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர் சதீஷ் சங்கர், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் பிரசாத், எல்லாபுரம் ஒன்றிய அதிமுக நிர்வாகி ஏ.கே.கோதண்டன், மாணவர் அணி நிர்வாகி சேதுபதி, கென்னடி அப்பு உள்ளிட்ட 125 பேர் ரத்ததானம் செய்தனர்.
முகாமில் தகவல் தொழில்நுட்ப அணி நகர நிர்வாகி விஜயகுமார், பொன்னேரி அவை தலைவர் அருள், அதிமுக நிர்வாகிகள் திராவிட செல்வன், உதயகுமார், சதீஷ், எழிலசரன், மதன்குமார், அரவிந்த், புகழேந்தி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சி.மோகன் , நகர தலைவர் மு.கே.சேகர், அதிமுக நிர்வாகிகள் எம்.எஸ்.எஸ்.வேலு, எம்,எஸ்.சரவணன், ஓடை ராஜேந்திரன், சாந்தி , புருஷோத்தமன், தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.