ஆண்டு விழாவில் பள்ளி மாணவர்களை பெஞ்ச்,
நாற்காலிகளை தூக்க வைத்த தலைமை ஆசிரியர்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 127 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி தலைமைஆசிரியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது . இதில் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பள்ளி மாணவர்களை பெஞ்ச், நாற்காலிகளை தூக்க வைத்தார் தலைமை ஆசிரியர், பள்ளி மாணவர்கள் பெஞ்ச் நாற்காலிகளை தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.