logo

கம்பம் அருகே சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பள்ளி மாணவகளுக்கு பேச்சுப்போட்டி

சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் பேச்சுப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

இன்று சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் வானவில் தொண்டு அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பாக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தொண்டு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஆஜரா தலைமை தாங்கினார். ராயப்பன்பட்டி காவல்துறை சார்பாய்வாளர் கோதண்டராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிட்டுக்குருவியின் முக்கியத்துவத்தை பற்றி பள்ளி மாணவிகள் பேச்சு போட்டியும் நடைபெற்றது. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் சில்வர் வாட்டர் கேன்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அன்பு அறம் அறக்கட்டளை அன்பு ராஜா, சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

30
4394 views