
https://youtu.be/blhLWZqQJSg?si=qMSVqmWTO6vzYGdQ
இன்று 16.12.2024 கோவை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மரியாதைக்குரிய தளபதி முருகேசன் அவர்களை சந்தித்து திட்டக் குழு உறுப்பினர் உயர்திரு VKSK. செந்தில் குமார் அவர்கள், ex சேர்மன் திரு. நடராஜன் அவர்கள், மற்றும் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியச் செயலாளர் காட்டம்பட்டி திரு. கிரி கதிர்வேல் அவர்கள் ஆகியோரது தலைமையில்,கோதவாடி குளத்திற்கு தண்ணீர் விட வேண்டியும், வடசித்தூர் to செட்டியக்கா பாளையம் கிளை வாய்க்கால், 15வது , 20வது மடை, மற்றும் மெட்டுவாவி வழியாக PAP உபரிநீர் விட வேண்டியும், ஷட்டர் அமைக்கவும், மனு கொடுத்தனர். அருகில் கோதவாடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. K. R. ரத்தினசாமி அவர்கள், ஒன்றியக் கவுன்சிலர் மன்றாம்பாளையம் திரு. மகேந்திரன் அவர்கள்,வடக்கு ஒன்றிய பொருளாளர் வடசித்தூர் A. P. சுப்பிரமணியம் அவர்கள்,வடசித்தூர் திரு. தம்பிராஜ் அவர்கள், வெள்ளே கவுண்டன் புதூர் கருப்புச்சாமி அவர்கள், கோதவாடி கிளைச் செயலாளர் திரு.மா இளங்கோவன் அவர்கள், திரு. பாலகிருஷ்ணன் அவர்கள், கோதவாடி இச்சிக்காடு சக்திவேல் அவர்கள்,மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்டச் செயலாளர் விரைவில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. V. செந்தில் பாலாஜி அவர்களை சந்தித்து விரைவில் தண்ணீர் விடுவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி அளித்தார்.