logo

இன்டெக்வெலிருந்து குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான புதிதாக ஆலாங்கொம்பில் கட்டப்பட்ட இன்டெக்வெலிருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையை பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் தலைமையில் துணைத்தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.இந்த பணிக்கான மதிப்பீடு 20.70 லட்சம் செலவில் இன்டெக்வலிருந்து எலகாம்பாளையம் சம்ப் வரை 2 கீ.மீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது.இந்த பூமி பூஜையில் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி, ஒப்பந்ததாரர் மனோஜ்,பெள்ளேபாளையம் ஊராட்சி கவுன்சிலர்கள் ரேவதி பழனிச்சாமி, கோகுல்,ராதிகா ராமச்சந்திரன்,வடிவேல்,மீசை செல்வராஜ்,ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற துணை தலைவர் மாரண்ணன், ஜடையம்பாளையம் தினேஷ், ரங்கசாமி,சுப்பன்,சேகர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

1
1228 views