logo

கணபதி நண்பர்கள் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து நடத்திய வலை கிரிக்கெட் போட்டி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த இலுப்ப நத்தம் பாஞ்சாயத்திற்குட்பட்ட பகத்தூரில் கணபதி நண்பர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய இரவு பகல் ஆட்டமாக வலை கிரிக்கெட் போட்டி திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது.இந்த போட்டியில் 80 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றார்கள்.இந்த போட்டியினை ஊர் செட்டு மை, எஜமானர் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினராக மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் , இலுப்ப நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி மற்றும் சிறுமுகை காவல்துறை ஆய்வாளர் கலந்து கொண்டார்.இப்போட்டியில் முதல் பரிசை B.B.C.C புளியம்பட்டி அணியும்,இரண்டாம் பரிசை கணபதி நண்பர்கள் நற்பணி அணியும்,மூன்றாம் பரிசை காங்கேயம் சென்னிமலை அணியும்,நான்காம் பரிசை S.S. பாய்ஸ் பகத்தூர் சௌடேஸ்வரி நகர் அணியும் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அதற்கு உண்டான ஊக்கத் தொகையும்,சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது.

0
3850 views