logo

புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பூமி பூஜை.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் சிறுமுகை அடுத்த பெள்ளேபாளையம் பாஞ்சாயத்திற்குட்பட்ட வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பெள்ளேபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரஸ் குமார் தலைமையில் துணைத்தலைவர் சுரேந்திரன் முன்னிலையில் பூமி பூஜை தொடங்கி வைத்தார்.இந்த கட்டிடம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்ததாரர் பி.கிருஷ்ணசாமி,ரேவதி பழனிசாமி,ரேவதி கண்ணப்பன், ராதிகா ராமச்சந்திரன்,விக்ரம்,கோகுல்,கிரிஜா,வடிவேல், ராமச்சந்திரன்,சத்யா,கவிதா,ஜெயமணி ஊராட்சி மன்ற செயலர் மல்லிகார்ஜுன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0
533 views