logo

சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ரோப் கார்க்காக பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருப்பு

வேலூர்12: சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் அதிகமானோர் யோக நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டி நான்கு ஐந்து மணி நேரமாக ரோப் கார்காக காத்திருக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 120 பேர் என்ற விதம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேர்களை அனுமதிக்கின்றனர்.மதியம் 12:45 முதல் 1:45 வரை உணவு இடைவெளிக்காக எடுத்துக் கொள்கின்றனர். பிறகு மீண்டும் இயக்கப்பட்டு 3:45 மணிக்கு முடிவடைகிறது. மாதந்தோறும் பராமரிப்பு பணிக்காக மூன்று நாட்கள் ரோப் கார் இயக்கப்படுவது இல்லை பக்தர்கள் தேவையான கழிவறை வசதி, குடிநீர் வசதி, வாகன நிறுத்துமிடங்கள். ராட்சத மின்விசிறி அமைக்கப்பட்டுள்ளது.

50
2868 views