தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அலட்சியம்..
தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விபத்துக்குள்ளான வாகனம் பரிசோதனைக்கு உட்படுத்தி அந்த வாகனம் சாலைகளில் ஓட்டுவதற்கு சரியானதாக உள்ளதா என்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கப்படும், அதற்கான வாகன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன RC புத்தகம் சமர்ப்பிக்க வேண்டும் இதில் இல்லாத ஆவணங்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும்,06/12/2023 அன்று வாகனத்தை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளார் ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீட்டு சான்றிதழ் சமர்ப்பித்த ரமேஷ் என்பவர் RC புத்தகம் அசல் சமர்ப்பிக்கவில்லை அதற்கான அபராதம் ரூபாய் 500யை செலுத்திவிட்டு விடுவித்துக் கொள்ளுங்கள் என்று சரிபார்த்த ஆய்வாளர் கூறியிருக்கிறார் ஆனால் அதுபோன்று நடக்கவில்லை மாறாக எந்த சான்றிதழும் ஆய்வுக்கு இல்லை என்று எழுதி ரூபாய் 1500 அபராதம் விதித்துள்ளார். அந்த அபராதத்தை செலுத்தியும் இன்று வரை அலைகழித்து உள்ளனர். வாகனமும் விடுதலை செய்யவில்லை.