மிக்ஜாம் புயல் நிலவரம்: சென்னையில் கனமழை ஓய்ந்தது!
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை நோக்கி வந்து கரைக்கு இ
மிக்ஜாம் புயல் நிலவரம்: சென்னையில் கனமழை ஓய்ந்தது!
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை நோக்கி வந்து கரைக்கு இணையாக ஆந்திராவை நோக்கி நகர்ந்தது. இப்புயல் காரணமாக உருவான அதிகனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சாலைகள், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்தனர்.
தற்போது, நவம்பர் 5ஆம் தேதி அதிகாலையில் கனமழை ஓய்ந்துள்ளது. இதனால், சென்னை மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் துவங்கியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில், இதுவரை 6 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.