logo
Select Language
Hindi
Bengali
Tamil
Telugu
Marathi
Gujarati
Kannada
Malayalam
Punjabi
Urdu
Oriya

அடிக்கப்போறது ஈரான்

அடிக்கப்போறது ஈரான்! இஸ்ரேலை விட்டு அலறியடித்து ஓடும் அமெரிக்கர்கள்! ஜெருசலேம் போஸ்ட் பகீர்!

உலகமே அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஈரானை எந்த நேரமும் அடிச்சு நொறுக்கும் எண்டு திக் திக் எண்டு பாத்துக்கொண்டிருக்க, இப்ப ஆட்டம் அப்படியே தலைகீழா மாறிட்டுது! இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கர்களை "இண்டைக்குள்ள எந்த பிளைட் கிடைச்சாலும் பிடிச்சு நாட்டை விட்டுத் தப்பிச்சு ஓடிடுங்கோ" எண்டு அமெரிக்கா அவசர அவசரமாக வெளியேற்றிக்கொண்டிருக்கிறது, உலக அரங்கில ஒரு மாபெரும் புயலைக் கிளப்பியிருக்கு.

இந்தத் திடீர் திருப்பத்துக்குப் பின்னால் இருக்கிற மாபெரும் அதிர்ச்சித் தகவல்களை இஸ்ரேலின் பிரபல பத்திரிகையான 'தி ஜெருசலேம் போஸ்ட்' (The Jerusalem Post) இப்ப அம்பலப்படுத்தியிருக்கு.

நள்ளிரவில் வந்த அவசர ஈமெயில்!
இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக் ஹக்கபீ (Mike Huckabee), இஸ்ரேல்ல இருக்கிற அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நள்ளிரவு 12:04 மணிக்கு ஒரு பகீர் ஈமெயிலை அனுப்பியிருக்கிறார்.

அந்த ஈமெயிலில அவர் மிகத் தெளிவாக, "உடனடியா இண்டைக்குள்ளேயே (TODAY) எல்லாரும் இஸ்ரேலை விட்டு வெளியேறுங்கோ. எந்த நாட்டுக்குப் பிளைட் கிடைக்குதோ, முதல்ல அந்த பிளைட்டைப் பிடிச்சு இந்த நாட்டை விட்டு வெளியே போறது மட்டும்தான் இப்ப உங்கட முதல் முன்னுரிமையா இருக்கோணும்" எண்டு செம பதற்றமாக் குறிப்பிட்டிருக்கிறார். இது மட்டுமில்லாம, அமெரிக்க அரசாங்கமும் தன்னோட குடிமக்களை இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எண்டு உத்தியோகபூர்வமா எச்சரிச்சிருக்கு.

முந்திக்கொண்டதா ஈரான்?
இவ்வளவு நாளா, J.D. வான்ஸ் உட்படப் பல அமெரிக்கத் தலைவர்கள் "நாங்க ஈரானோட நீண்டகாலப் போருக்கு ரெடியில்லை" எண்டு சொல்லிக்கொண்டிருக்க, இப்ப திடீரெண்டு தங்களோட ஆட்களை இஸ்ரேலை விட்டு வெளியேத்துறதப் பாத்தால், ஒரு மாபெரும் சந்தேகம் எழும்புது.

அமெரிக்கா ஈரானை அடிக்கிறதை விட்டுட்டு, இப்படி அலறியடிச்சுக்கொண்டு ஓடுறதப் பாத்தால், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் முந்தி, ஈரான் தன்னோட பிரம்மாண்டமான தாக்குதலைத் தொடங்கப் போகுது எண்ட ரகசியத் தகவல் அமெரிக்க உளவுத்துறைக்குக் (Intelligence) கிடைச்சிருக்கலாம் எண்டு அரசியல் நிபுணர்கள் அடிச்சுச் சொல்லுகினம்.

உலக நாடுகளின் அலறல்!
இந்த நடுக்கம் அமெரிக்காவுக்கு மட்டுமில்லை. மத்திய கிழக்கில எந்த நேரமும் மாபெரும் போர் வெடிக்கலாம் எண்ட பயத்தில, உலகத்தில இருக்கிற அத்தனை முக்கிய நாடுகளும் இப்ப தங்கட மக்களை அலறியடிச்சுக்கொண்டு வெளியேற்றத் தொடங்கிட்டினம்:

கனடா & சீனா: ஈரானில் இருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளன.

ஆஸ்திரேலியா: இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள தங்கள் தூதரக அதிகாரிகளின் குடும்பங்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லியிருக்கு.

இந்தியா, ஜெர்மனி, பின்லாந்து: உள்ளிட்ட பல நாடுகள், எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என 'சிவப்பு எச்சரிக்கை' (Red Alert) விடுத்துள்ளன.

அடுத்தது என்ன நடக்கும்?
விமானங்கள் கிடைக்கிற வரைக்கும் பிளைட்டைப் பிடிச்சுத் தப்பிச்சுக்கோங்கோ எண்டு அமெரிக்கா சொல்லுறதப் பாத்தால், அடுத்த 24 தொடக்கம் 48 மணித்தியாலங்களுக்குள்ள மத்திய கிழக்கில ஒரு மாபெரும் சம்பவம் நடக்கக் காத்திருக்கு. மூன்றாம் உலகப்போருக்கான கவுண்டவுன் (Countdown) ஆரம்பமாகிவிட்டதா என்ற அச்சம் இப்போது உலக நாடுகள் மத்தியில் பரவியுள்ளது.

வாசகர்களின் கருத்துக்கு:
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை அடிக்கிறதுக்கு முந்தி, ஈரான் முந்திக்கொண்டு இஸ்ரேலை அடிக்கப் போகுதா? இந்தத் திடீர் வெளியேற்றத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான மர்மம் என்ன? உங்கள் கருத்துக்களைக் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்!

5
831 views

Comment